Sunday, July 28, 2013

10 Steps You Can Take To Slow Down Aging

1. Eat healthy: Consume plenty of fruits, vegetables and whole grain foods. Fiber, calcium, iron, magnesium, and vitamins all play a best part in keeping your body functioning at its peak. 2. Drink lots of fluids to maintain healthy skin and flush out waste.
3. Exercise regularly: Exercise improves appetite, makes healthy bones, gives you a better emotional outlook and improves digestion and circulation.
4.Quit smoking and avoid secondhand smoke. Smoking has very damaging effects and dramatically increases your risk of getting cancer, heart disease and diabetes
5. Manage stress: Stress is the major culprit for most of common diseases. Do exercise, socialize and take breaks from your busy working schedule.
6. Antioxidants: Consuming foods rich with antioxidants are very helpful to lower the aging process, many studies have shown
7. Use sunscreen to prevent sunburn: It's very important to know even sunlight on a cloudy day contains almost same amount of ultraviolet rays and it's very useful to apply sunscreen lotions prescribed by your Dermatologist even in a gloomy day.
8. Keep strong relationships. Maintaining close ties to your family and friends are crucial to healthy aging.
9. 
Seeking prompt medical care when you’re ill or injured. Listen to your body and take care of any little problems before they become big problems.
10. 
Look for ways to improve overall well-being and enthusiasm for life. Be curios and creative which will encourage you to learn new things

Food rules Make these changes to your diet to lose weight and get a flat tummy fast!

Food rules Make these changes to your diet to lose weight and get a flat tummy fast!
1 Cut the C.R.A.P: Avoid the four main food groups that cause fat to cling to our bodies: caffeine, refined sugar, alcohol and processed foods.
2 But allow yourself a weekly cheat meal. Once a week, enjoy an indulgent meal of whatever you fancy, from creamy pasta to a slice of chocolate cake with cream. As ong as you're eating clean, healthy food the rest of the time, an occasional high-fat treat actually speeds up your metabolism.
3 Take fish oil supplements: They burn fat and supply essential fatty acids.
4 Always have breakfast: Eat within one hour of waking up. If you don't have time for a proper breakfast, just grab a piece of fruit and a few nuts.
5 Don't eat after 8pm: Eating a large meal in the evening when your body is slowing down or sleeping is a bad idea for your digestion and weight.

Thursday, July 18, 2013

தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள் :-

தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள் :-


1. நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

2. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.

3. அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.

4. ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.

5. பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

6. கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

7. வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.

8. கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

9. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.

குங்குமம் தயாரிப்பது எப்படி?


குங்குமம் தயாரிப்பது எப்படி?
தேவையானவை:

1) அரிநெல்லிக்காய் சைசில் கொட்டை மஞ்சள் - ஒரு கிலோ
2) எலுமிச்சம் பழச்சாறு - 1 1/2 லிட்டர்
3)வெங்காரம் - 170 கிராம்
4)சீனாக்காரம் - 65-70 கிராம்
5)நல்லெண்ணை - 100 கிராம்
6)ரோஜா அத்தர் அல்லது தாழம்பூ அத்தர் - வாசனைக்கு தேவையான சில துளிகள்

கொட்டை மஞ்சளை நாலு நாலு துண்டுகளாக உடைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் போடவும்.
அதோடு பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறை அதனுடன் கலக்கவும். அத்துடன் வெங்காரம், சீனாக்காரம் இரண்டையும் சேர்த்து கலக்கவும் நன்றாகக் கலந்ததும் மெல்லிய வெள்ளைத்துணியால் மூடி தனியே வைக்கவும். தினமும் காலையும் மாலையும் நன்றாகக் கிளறிவிடவும். கிளறுவதற்கு மரக்கரண்டியையே உபயோகிக்கவும் சாறு முழுவதும் மஞ்சளில் ஏறும் வரை இதே போல் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். சாறு ஏற ஏற மஞ்சள் குங்கும நிறத்துக்கு மாறியிருக்கும்.

பிறகு ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டி நிழலில் காயவைக்கவேண்டும். இப்போது கேட்டு உடனே செய்து தர முடியாது. நாளும் நேரமும் நிறைய பொறுமையும் பிடிக்கும் வேலையிது!

நன்றாக காய்ந்த பிறகு இதற்கென்றே உள்ள இரும்பு உரல், உலக்கை கொண்டு கைப்பிடி கைப்பிடி அளவாகப் போட்டு இடிக்கவேண்டும். சுமாராக இடிபட்டதும் அதே பாத்திரத்தின் வாயை மெல்லிய வெள்ளைத்துணியால் கட்டி பொடி செய்ததை அதில் கொட்டி மெதுவாக 'வஸ்தரகாயம்' செய்யவேண்டும். மேலிருக்கும் கப்பியை உரலிலிட்டு மீண்டும் இடிக்கவேண்டும்.


this process goes on & on till you get little கப்பி. fine powder -ஆக கிடைத்த மஞ்சள் பொடியை.... இனிமேல் 'குங்குமம்' என்றே அழைக்கலாம். குங்மத்தோடு தேவையான அளவு நல்லெண்ணை ஊற்றி கிளறவும். நெற்றியில் நன்றாக அப்பிக்கொள்ள எண்ணை தேவை.

இறுதியாக கமகமக்கும் வாசனைக்கு தாழம்பூ அத்தர், ரோஜா அத்தர் சில சொட்டுகள் விட்டு நன்றாக கலந்து காற்றுப் புகாத கண்ணாடி பாட்டிலில் மாற்றி வைத்துக்கொள்ளவும். தேவைப்படும் போது கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உபயோகிக்கலாம். விரும்பிக் கேட்பவர்க்கும் கொடுக்கலாம். சிறு பிளாஸ்டிக் டப்பாவில் பக்கிங் செய்து விற்பனை செய்யலாம் எல்லோரும் மஞ்சள் குங்மத்தோடு வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன். பழைய பாட்டொன்றொடு முடிக்கிறேன்.

"கொத்து மஞ்சள் முகத்தில் பூசி கொறநாட்டு புடவை கட்டி
நெத்தியிலெ திலகமிட்டு நீண்ட சடை பின்னிவிட்டு
உத்தமி சென்ற நாளில் உலகம் கண்டு புகழ்ந்ததையா
நற்றிடும் பழமை அதை நாடுவதே நல்லதையா!"

மிகு எடையைக் குறைப்போமே!

மிகு எடையைக் குறைப்போமே!

இன்று உடல் எடைப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உள்ளதாகவே நினைக்கிறேன்.

வாழ்வதற்கே உணவின்றிப் பரிதாபமாக வாழ்பவர்களும் உயிரை விடுபவர்களும் உலகில் அனேகம்பேர் இருக்க அதே உணவின் மிகுதியால் வேறொரு பகுதியினர் துன்பப்படுவதையும் பார்க்கிறோம்.

ஒரு குருவி எவ்வளவு எடை இருக்கவேண்டுமோ அவ்வளவு எடையுடன் இருந்தால்தான் அது வானில் பறந்து திரிய முடியும். ஒரு நாய் எவ்வளவு எடை இருக்கவேண்டுமோ அவ்வளவு எடையுடன் இருந்தால்தான் அது விரைந்தோட முடியும்.

ஒரு சொசுகூட அதற்கு இருக்கவேண்டிய எடையைவிடக் கூடுதலாக இருந்தால் பறந்து வந்து நம்மைப் கடிக்க முடியாது. அதனால் வாழவும் முடியாது.

இதுமட்டுமல்ல இன்னும் எத்தனையோ இதுபோன்ற உதாரணங்களைக் கண்கூடாகக் காண்கிறோம்.

ஆனால் மனித இனமாகிய நாம் மட்டும் எவ்வளவு எடை இருந்தால் நல்ல வாழ்வு வாழமுடியுமோ அவ்வளவு எடைதான் இருக்கவேண்டும் என்பதை உணரத் தவறுகிறோம்.

மற்ற உயிரினங்கள் வாழவேண்டுமென்றாலே அதற்கான எடையுடன் மட்டுமே உடம்பை வைத்திருக்கவேண்டும் இல்லாவிட்டால் வாழ முடியாது.

ஆனால் மனிதனால் அப்படி வாழமுடியும் என்பதால் விதிக்கு மாறாக வாழ்கிறோம். அப்படி விதிக்கு மாறான வாழ்வு வாழ்வதால் வாழவேண்டிய முறையில் அல்லாமல் வாழ்வே ஒரு நோயாக வாழ்ந்துகொண்டுள்ளோம். இது சரியா?

மனிதன் தோன்றி வளர்ந்தது இயற்கையில்தான். துவக்க காலத்தில் நாமும் மற்ற விலங்குகளைப்போல உணவுக்கே போராடித்தான் வாழவேண்டியிருந்தது. அதனால் எப்படி இருந்தால் வாழமுடியுமோ அப்படித்தான் இருந்தோம்.

ஆனால் மனிதன் பரிணாம வளர்ச்சியால் மற்ற உயிரினங்களில் இருந்து வேறுபட்ட பாதையில் பயணத்தைத் துவக்கிய பின்னால் மற்ற உயிரினங்களைவிட சக்திமிக்கவனாக வளர்ந்த பின்னால் முன்போலவே மற்றவற்றைப்போன்ற வாழ்க்கை வாழவேண்டிய அவசியமில்லை. மற்ற உயிரினங்களின் சக்தியை நமதாக்கிக் கொண்டோம். இயற்கையில் பொதிந்துள்ள சக்திகளை நமதாக்கிக் கொண்டோம். அதனால் சொந்த சக்திக்கு சொந்த உழைப்புக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது.

அதுமட்டுமல்ல உடலால் உழைப்பது இழிவானதாகக் கருதப்படும் போக்கும் வளர்ந்தது.

நாம் வேண்டுமானால் வசதிக்குத் தக்கபடி ஊதாரித்தனமாகச் செலவு செய்யலாம். ஆனால் நம் உடம்பு அப்படிச் செய்யாது. உழைக்காமல் தேவையில்லாமல் தன்னிடமிருக்கும் சிறு சக்தியையும் செலவு செய்யாது.

ஆனால் நாம் உண்ணும் உணவு சாதாரணமான இயக்கத்துக்குப் போக கூடுதலாக இருக்கும் சக்தியைக் கொழுப்பாகச் சேமித்துவைத்துக் கொள்கிறது. அது உடம்பில் ஆங்காங்கே தங்கி எடையை அதிகரிக்கிறது.

அதன்காரணமாக நமது உடம்பை அந்நிய எடைபோல நாமே சுமந்து திரிகிறோம்.

அந்நிய எடையைக்கூட சில வினாடிகளில் அல்லது சில நிமிடங்களில் இறக்கி வைத்துவிடலாம். ஆனால் நம்முடைய உடல் எடையானது காலமெல்லாம் சுமக்கவேண்டிய பயனற்ற சுமை ஆகிறது.

பெண்களின் இடைக்கு உடுக்கையை உதாரணமாகச் சொல்வார்கள். காரணம் இரண்டும் மேலும் கீழும் விரிந்தும் இடையில் ஒடுங்கியும் இருக்கும். ஆண்களுக்கும் அப்படித்தான் இருக்கவேண்டும். ஆனால் தற்கால ஆண் பெண் இருபாலரிலும் பெரும்பாலோர் தங்கள் இடைகளை உடுக்கைபோல் அல்ல தவில் போல் வைத்துள்ளார்கள். ஆதாவது மேலும் கீழும் சிறுத்தும் நடுவில் பெருத்தும்! இது நல்லதா?

இந்தக் கூடுதல் சுமையைக் கால்கள் மட்டும் சுமப்பதில்லை. தோள்கள் மட்டும் சுமப்பதில்லை. இதயம் சுமக்கிறது நுரையீரல் சுமக்கிறது. கல்லீரல் சுமக்கிறது. சிறுநீரகங்கள் சுமக்கின்றன. குடலும் சுரப்பிகளெல்லாம்கூடச் சுமக்கினறன. ஆம் அவையெல்லாம் பயனற்ற இந்தப் பாழாய்ப்போன குப்பைகளுக்காகத் தங்கள் பணியைக் கூடுதலாகச் செய்கினறன. அது சுமைதானே!

எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் இந்தக் குப்பையான கூடுதல் சுமையைக் குறைக்காவிட்டால் வாழ்வைத் திருப்தியாக அனுபவிக்கமுடியாது.

குண்டாக இருக்கும் ஆணை ஒரு பெண்ணோ குண்டாக இருக்கும் பெண்ணை ஒரு ஆணோ மனப்பூர்வமாக விரும்பமுடியாது. அவர்கள் சேர்ந்து வாழும் வாழ்வு எப்படியிருக்கும் என்று பார்த்தால் கொடுமையாக இருக்கும் என்றுதான் சொல்லவேண்டும்.

இத்தகைய அவலத்திலிருந்து மீண்டாகவேண்டும். அதற்காக ஒரு இலக்கு வைத்துக்கொள்ள வேண்டும். அந்த இலக்கைநோக்கி ஒவ்வொருநாளும் முயற்சி இருக்கவேண்டும். அந்த இலக்கை அடையும் முன்னே அதன் பயன்களை உணரலாம். அடைந்துவிட்டாலோ அற்புதமான ஒரு உலகையே காணலாம். இலக்கை நெருங்குமளவு நன்மையே!

ஆதாவது ஒரு ஆணோ அல்லது பெண்ணொ சிறந்த உடல் ஆரோக்கியத்தைக் கொண்டிருக்கவேண்டுமானால் உடல் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு சில அம்சங்களைச் சொல்கிறேன். அந்த முறையில் ஒவ்வொருவருடைய உடலும் இயக்கமும் இருந்துவிட்டால் அதற்க ஈடு இணையே இருக்கமுடியாது.

முதலாவதாக ஒருவருடைய எடை எவ்வளவாக இருந்தாலும் சரி அவர் நிற்கும்போது அவருடைய உடம்பின் நடுப்பகுதி சிறுத்து இருக்க வேண்டும்.

அவர் பாதங்கள் மட்டும் சமமாக நிலத்தில் படிந்திருக்கும் வகையில் முழங்கால்களை மடித்து குத்தவைத்து உட்கார முடியவேண்டும்.

அப்படி உட்கார முடிவது மட்டுமல்ல மடிந்திருக்கும் கால்களைச் சேர்த்துக் குழந்தையைக் கட்டி அணைப்பதுபோல அணைத்துக்கொள்ள முடியவேண்டும். அப்போது இருகைகளின் விரல்களும் அடுத்த கையின் முழங்கையைத் பிடித்துக் கொண்டிருக்கவேண்டும்.

அதேபோல ஒரே காலால் நொண்டியடித்துக்கொண்டே நூறுமீட்டர் தூரமாவது நிற்காமல் செல்லக்கூடியவராக இருக்கவேண்டும்.

கீழே சம்மணம் போட்டு உட்கார்ந்திருக்கும் போது மடியில் உட்கார்ந்திருக்கும் ஒரு குழந்தையைத் தூக்கிக்கொண்டு கைகளை ஊன்றாமல் அப்படியே மேலே எழுந்திருக்கவேண்டும்.

மூச்சிரைக்காமல் ஐநூறு தோப்புக்கரணம் போடக்கூடியவராக இருக்கவேண்டும்.

இந்தத் தகுதிகள் எல்லாம் ஒருவருக்கு இருந்து அவர் இயற்கை உணவில் ஈடுபாடும் காட்டினால் நூறு ஆண்டுகள் இளைஞரைப்போல் வாழ்வது நிச்சயம்.

இந்தத் தகுதிகள் எல்லாம் முன்னர் ஒவ்வொரு மனிதரிடமும் இருந்தன. ஆனால் நிறையப்பேர் இழந்துவிட்டோம். இழந்ததை மீட்டால் போதும்!

இது அடைய முடியாத இலக்கு அல்ல. அடைவதன்மூலம் வாழும் தகுதியை உயர்த்திக்கொள்வோம்.

பயனற்ற வாழ்வு வாழ்வதைவிடப் பயனுள்ள வாழ்வுக்கு முயற்சி செய்வோம். வெற்றியும் பெறுவோம்.

Thursday, July 11, 2013

தக்காளியின் நன்மைகள்........

தக்காளியின் நன்மைகள்........

தக்காளி என்பதும் ஏதோ குழம்பு வைப்பதற்குத் தேவையான ஒன்று என்றே அனைவரும் கருதுகின்றனர். தக்காளியும் பழ வகைகளில் ஒன்றுதான் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

பழங்களைச் சாப்பிடுவதைப் போலவே தக்காளிப் பழத்தையும் அப்படியே சாப்பிட்டால் உடலிற்கு வளத்தையும் நல்ல பலத்தையும் கொடுக்கும்.

தக்காளிப் பழத்தை அப்படியே சாப்பிடுவது என்பது கிட்டத்தட்ட டானிக் குடிப்பதற்கு ஒப்பானது. அதுமட்டுமல்லாமல், தக்காளிப் பழத்தை எந்த வகையில் பக்குவப்படுத்திச் சாப்பிட்டாலும், அதன் சக்தி அப்படியே நமக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தக்காளிப் பழத்தில் அதிகபட்சமாக வைட்டமின் ஏ சத்து 91 மில்லி கிராம் உள்ளது. வைட்டமின் பி1 சத்து 34 மில்லி கிராம், பி2 வைட்டமின் 17 மில்லி கிராமும், சி வைட்டமின் 9 மில்லி கிராமும் உள்ளது. மிகக் குறைவாக சுண்ணாம்புச் சத்து 3 மில்லி கிராமே உள்ளது.

தக்காளிக்கு இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உண்டு. இரத்தத்தையும் இது உற்பத்திச் செய்யக் கூடியது. நல்ல இரத்தத்திற்கு வழி செய்வதால் இரத்த ஓட்டமும் சீராக இருக்க உதவுகிறது.

பொதுவாக இரத்த ஓட்டம் சீராகவும், சுத்தமாகவும் இருந்தாலே உடலில் நோய்த் தொற்று ஏற்படுவது எளிதான காரியமல்ல.

தக்காளிப் பழத்தை எந்தவிதத்திலாவது தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானது.

தக்காளிப் பழத்தை சூப்பாக வைத்து காலை, மாலையில் சாப்பிட்டு வந்தால் உடல் சருமம் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் சருமம் மென்மையாகவும், ஒருவித பொலிவுடன் திகழும்.
இதுமட்டுமல்லாமல், சரும நோய்கள் வராமலும் பார்த்துக் கொள்ளும்.

தக்காளிப் பழத்தைக் கொண்டு ஜாம் செய்து வைத்துக் கொண்டால், அதனை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என காலை உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம்.

குழந்தைகளும் விரும்பி உண்பார்கள். அவர்களுக்குத் தேவையான சத்தும் எளிதில் கிடைத்துவிடும்.
விலை உயர்ந்த பழங்களை உட்கொள்ள முடியாத ஏழை, எளிய மக்கள் தக்காளிப் பழத்தை சாப்பிடலாம் என்று சொல்லலாம். ஆனால், தற்போதைய விலைவாசியில் தக்காளிப்பழமும் ஒரு விலை உயர்ந்த பழமாக மாறிவிட்டுள்ளது என்பதே உண்மையாக இருக்கிறது

Tuesday, July 9, 2013

தண்டு கீரை மகிமை



• முளைக் கீரை வளர்ந்து பெரிதானால் தண்டுக் கீரை. தண்டுக் கீரையில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று வெளிர் பச்சை மற்றொன்று சிவப்பு. இதில் சிவப்பு நிறத் தண்டுக் கீரை சத்தும் ருசியும் அதிகமுள்ளது.
• வெண்கீரைத் தண்டில் இரும்புச் சத்தும் சுண்ணாம்புச் சத்தும் இருக்கிறது.
• வெண்கீரைத் தண்டைச் சமைத்துச் சாப்பிடுவதால் நீர்க்கடுப்பு நீங்கும். மூலச்சூடு தணியும், உடல் குளிர்ச்சியாகும்.
• சிவப்பு நிறக் கீரைத் தண்டு பெண்களின் மாதவிடாய் கோளாறுகளைக் குணமாக்குகிறது.
• சிவப்பு கீரை சூட்டைத் தணிக்கும், மலச்சிக்கலைப் போக்கும், குடற்புண்ணை ஆற்றும்.
• வெண்கீரைத் தண்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொந்தி கரையும். வாதம் உள்ளவர்கள் வெண்கீரைத் தண்டை சாப்பிடக் கூடாது.